Tntet 2022 paper 2 7th tamil நூல் மற்றும் நூலாசிரியர்கள் 90 question & answer

                                                                

SUBHI LEGENDRY EDUCATION – TAMIL IMPORTANT QUESTION BANK

 ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்தலுக்கும் நமது இணையதளத்தின் சார்பாக பாடத்திட்டம் வாரியாக தேர்வுகள் வழங்கப்படுகின்றது 

                                     தகுதி தேர்வை பொருத்தவரையில் தமிழ் பாடத்திற்கு இரண்டு விதமான பாடத்திட்டங்களானது வகுக்கப்பட்டுள்ளது முதலில் இலக்கணப் பகுதியை முழுமையாக உள்ளடக்கியும் இரண்டாவது மொழித்திறன் பகுதியை உள்ளடக்கியதாகவும் அமையப் பெற்றுள்ளது இவற்றில் மொழித்திறன் பகுதியை தொகுக்கின்ற பட்சத்தில் 27 தலைப்புகளானது இடம்பெற்றுள்ளது இதனைக் குறித்த முழுமையான விளக்கங்கள் ஆனது நமது இணையதளத்தில் முந்தைய பதிவுகளில் வழங்கப்பட்டுள்ளது 

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 இவற்றிற்கான பாடத்திட்டம் மற்றும் அவற்றுக்கான தலைப்புகளை கண்டறிய கீழே உள்ள லிங்கினைபயன்படுத்திடவும்

                        CLICK HERE FOR TAMIL SYLLABUS                                                          

ஆகவே இணையதளத்தின் வாயிலாக இவற்றில் ஒவ்வொரு தலைப்புகள் வாரியாக தேர்வுகளானது இன்று முதல் ஆரம்பமாகிறது இவற்றில் முதலில் உள்ள தலைப்பு நூல் மற்றும் நூல் ஆசிரியர்கள் இதனை பயிற்சி பெறும் பொழுது 

பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நூல் 

அந்த நூலை எழுதிய ஆசிரியர்கள்

 அந்த நூலில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்

 அந்த நூலுக்கு வழங்கக்கூடிய வேறு சிறப்பு பெயர்கள் 

ஆசிரியர்களுடைய சிறப்பு பெயர்கள் 

ஆசிரியர்கள் எழுதிய நூலின் வரலாறு 

                                      இதனை முழுமையாக தொகுத்து பார்க்க வேண்டும் அதன் அடிப்படையில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள தகவல்களை இணைத்து இணையதளத்தின் வாயிலாக மாதிரி தேர்வு -2

                                     இவற்றில் 7 வகுப்பில் இடம் பெற்றுள்ள தகவல் ஒருங்கிணைத்து 88 வினா மற்றும் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் பயன்படுத்திக் கொள்ளவும்


                                                      SUBHI LEGENDRY EDUCATION – 7TH TAMIL

                                                            நூல் மற்றும் நூலாசிரியர்கள்

                                                                     TERM - 01

1. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்

அ.காமராஜர்                                      

ஆ. நாமக்கல்கவிஞர்          

இ.இளங்கோ அடிகள்        

ஈ.எவரும்இல்லை

2. அன்பும் அறமும் ஊக்கிவிடும் அச்சம் என்பதை போக்கிவிடும் - என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

அ. உடுமலை நாராயணகவி

 ஆ.சுரதா               

இ. நாமக்கல்கவிஞர்      

ஈ.திருவள்ளுவர்

3.அதிமதுரத் தழையை யானைகள் தின்றபடி புதுநடை போடுமடீ கிளியே - என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

அ. உடுமலை நாராயணகவி                                 

ஆ சுரதா

இ.நாமக்கல்கவிஞர்                                                                             

ஈ.திருவள்ளுவர்

4.கொல்லிப்பாவை என்ற சிற்றிதழை நடத்தியவர்யார்

அ. சுரதா

ஆ. ராஜமார்த்தாண்டம்      

இ.காவற்பெண்டு

ஈ.மாணிக்கவாசகர்

5.புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக் காலத் தமிழ் மக்களின்................ ஆகியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.

(i) வாழ்க்கை முறை            II) நாகரிகம்                         

III) பண்பாடு                        Iv) கலாச்சாரம்

இவற்றுள் சரியனவற்றை தேர்ந்தெடுக்க

அ. 1,2 மட்டும்    

ஆ.2 மட்டும்                       

இ.1,23 மட்டும்   

ஈ.அனைத்தும்

6.வீரபாண்டியகட்ட பொம்மு கதைப் படலை தொகுத்தவர்

அ.நா. வானமாமலை         

ஆ இளங்கோவடிகள்         

இ.சுரதா

ஈ.காவற்பெண்டு

7.……………..என்னும் நூல் இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற முதல் நூல்

அ.தமிழ்விருந்து  

ஆ தமிழின்பம்    

இ. மேடைப்பேச்சு             

ஈ.கடற்கரையினிலே

8. யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஊரும்-என்ற வரியை பாடியவர் யார்?

அ.சுரதா 

ஆ. காவற்பெண்டு              

இ. சேது 

ஈ.திரு.வி.க

9. கீழ்கண்ட கூற்றுகளை கவளி

1.அறம்- 38.

II. பொருள்-75.

III. இன்பம்-20

சரியானவற்றைதேர்ந்தெடு

அ. 1 மட்டும்                       

1, 2 மட்டும்    

இ. 2, 3 மட்டும்   

ஈ.1, 3 மட்டும்

10. அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகட்டிக் குறுகத்தரித்த குறள், -என்று திருக்குறளை போற்றியவர் யார்?

அ.பாரதியார்                       

ஆ.பாரதிதாசன்    

இ. ஒவ்வையார்.        

ஈ.காக்கைபாடினியார்

11.இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் யார்

அ. நேரு 

ஆ. தாமஸ்              

இ. ஜாதவ்பயேங் 

ஈ. சர்ச்சில்

12.எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில், திரிபும் தத்தமில் சிறிது உளவாகும்-என்னும் வரிகள் நூல்கள் உணர்த்துகிறது

அ.நன்னூல்                         

ஆ புறநானூறு      

இ. திருக்குறள்     

ஈ.சிலப்பதிகாரம்

13. பகுதறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?

அ.குமணவள்ளல்'

ஆ. வேள்பாரி 

இ. உடுமலைநரயணக்கவி   

ஈ. சேதுராமன்

14. இராசகோபாலன் இயற்றிய நூல்கள்இவற்றுள் எது

1, அமுதும் தேனும்

2. தேன்மலை

2. அமுதகாளம்

4. துறைமுகம்

இவற்றுள் எது சரியானவை இல்லை?

அ.1 மட்டும்                       

ஆ.2 மட்டும்.                       

இ.2, 4 மட்டும்    

ஈ.அனைத்தும்

15. திருக்குறளின் வேறு பெயர்கள் யாவை.

1.முப்பால்           

 2. திரிகடுகம்                      

3.தெய்வநூல்                      

4. பொய்யாமொழி

இவற்றுள் தவறானவற்றை தேர்ந்தேடுக்க

அ. 2,3 தவறு                                      

ஆ. 2 மட்டும் தவறு        

இ. 3 மட்டும் தவறு                           

ஈ.அனைத்தும் சரி

16. நாமக்கல்கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று

அ. மலைகள்ளன்                

ஆ. என்கதை                      

இ. சங்கொலி                      

ஈ.காந்திபுராணம்

17. பகைவரை வெற்றி கொண்டவரை பாடும் இலக்கியம்

அ.அந்தாதி                          

ஆ பரணி              

இ. கலம்பகம்                     

ஈ.பத்துப்பாட்டு

18. பொருத்துக

1. பகைவரை வென்றதை பாடப்படுவது -பரணி

2. இசைப்பாடல்                                                          -பரிபாடல்

3. வான்புகழ் கொண்டது                                   - சங்க இலக்கியம்

4, அகம், புறம் மெய்பொருளாகக் கொண்டது - திருக்குறள்

இவற்றுள் சரியானவற்றை கண்டறிக

அ.1,2,3 மட்டும் சரி 4 தவறு                             

ஆ. 23 மட்டும் சரி 1,4தவறு

இ. 1,2 மட்டும் சரி 3,4தவறு                                            

ஈ.அனைத்தும் சரி

19. கீழ்கண்ட கூற்றுகளை கவனி

கூற்று: இராசகோபலன்இயர்பெயர் சுரதா

காரணம்: பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் எனமாற்றிக் கொண்டார் அதன் சுருக்கம் சுரதா என்பதாகும்

அ.கூற்று மற்றும் காரணம் சரி               

ஆ கூற்று சரி காரணம் தவறு

இ.கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு                

ஈ. இவற்றில் எதுவும் இல்லை


download now our  subhi legendry education mobile apps


20. சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்தகவிஞர் யார்?

அ.சுரதா                                              

ஆ. உடுமலைநரயனக்கவி

இ.ராஜமார்த்தாண்டம்                      

ஈ.கவிமணி

21.பொருந்தாத இணையைக் கண்டறிக

1. காவற்பெண்டு-சங்ககாலப்புலவர்

2.காவற்பெண்டு-பெண்பாற்புலவர்

3. காவற்பெண்டு -முல்லைப்பாட்டில்பாடல்பாடினார்

4. காவற்பெண்டு-கோப்பெருநற்கிள்ளியின்தாய்,

இவற்றுள் தவறானவற்றை தேர்ந்தேடுக்க

அ.24 தவறு                          ஆ.1,2 தவறு                        

இ. 34 தவறு                         ஈ. 14 தவறு

                                             TERM  - 02

22. பெரும்பாணாற்றுப்படை நூலை இயற்றியவர் யார்?

A.நல்லூர் நத்தத்தனார்                       

B.கடியலூர் உருத்திரங்கண்ணனார்

C.உருத்திரசன்மனார்                         

D. நப்பூதனார்

23.'நெடுந்தொகை' என அழைக்கப்படுவது எது?

A. அகநானூறு      

B.புறநானூறு                      

C.நற்றிணை                        

D. ஐங்குறுநூறு

24. எட்டுத்தொகை நூல்களுள் சரியானது எது?

A பதிற்றுப்பத்து   

B.முல்லைப்பாட்டு     

C.நெடுநல்வாடை   

D.குறிஞ்சிப்பாட்டு

25. 'உலகு கிளர்ந்தென்ன உழுவம்' என்று கூறும் நூல் எது?

A. புறநானூறு                     

B.மணிமேகலை  

C.அகநானூறு                      

D. பட்டினப்பாலை

26.பூம்புகார் நகரைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

A. சிலப்பதிகாரம், மணிமேகலை                    

B. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை

C. மணிமேகலை, குண்டலகேசி                     

D.சிலப்பதிகாரம், குண்டலகேசி

27. புனையா ஓவியம் புறம் போந்தன்ன - என்று கூறும் நூல் எது?

Aநெடுநல்வாடை

B.மணிமேகலை  

C. வளையாபதி   

D.சீவகசிந்தாமணி

28. சரசுவதி மாலை என்னும் நூலை இயற்றியவர் யார்?

A.வரதன்

B.கம்பர்

C.கபிலர்

D. பரிமேலழகர்

29, 'கனவு' என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் யார்?

A. தேனரசன்                       

B.கல்கி  

C.சுப்ரபாரதிமணியன்        

D.நா.பிச்சமூர்த்தி

30. இளமையில் கல் என்று கூறியவர் யார்?

A. ஔவையார்    

B.பாரதியார்                        

C.பெரியார்.                         

D.கலிமணி

31. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' - என்று பாடியவர் யார்?

A. திருக்குறளார்  

B. திருவள்ளுவர்                  

C.பாரதியார்                        

D.பாரதிதாசன்

32. நன்றின்பால் உய்ப்பது அறிவு - என்று கூறியவர் யார்?

A. திருக்குறளார்  

B.திருவள்ளுவர்   

C.பாரதியார்                        

D.பாரதிதாசன்

33. "கலம் தந்த பொற்பரிசும், கழித்தோணியால் கரை சேர்க்குந்து" - என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A. புறநானூறு                     

B.அகநானூறு                      

C. கலித்தொகை  

D. பரிபாடல்

34. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் யார்?

A மருதன் இளநாகனார்                     

B.கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

C.நப்பூதனார்                                                     

D.நல்லூர் நத்தத்தனார்

35 பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

A. கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன்                          

B. கரிகாலன்

C. தொண்டைமான் இளந்திரையன்                

D.கடியலூர் உருத்திரங்கண்ணனார்

36. கீழ்க்காண்பவனவற்றில் பத்துப்பாட்டு நூல்களுள் அல்லாதது எது?

A. மதுரைக்காஞ்சி

B.கலித்தொகை   

C.குறிஞ்சிப்பாட்டு             

D. பட்டினப்பாலை

37. அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்?

A. ஐன்ஸ்டீன்                      

B.நியூட்டன்                        

C. ஜூல்ஸ் வெர்ன்                             

D. அப்துல்கலாம்

38, கண்ணகி புரட்சிக் காப்பியம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

A. பாரதிதாசன்    

B.பாரதியார்         

C. முடியரசன்                      

D.வாணிதாசன்

39. வள்ளுவர் காட்டிய வழி என்னும் நூலை இயற்றியவர் யார்?

A. திருக்குறளார் வீ. முனிசாமி           

B. திருவள்ளுவர்  

C.கவிமணி          

D.திரு.வி.க

40. தண்ணீர் யுத்தம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

A. கோமல் சுவாமிநாதன் 

B.சுப்ரபாரதிமணியன்        

C.சுப்புரத்தினம்     

D.சுப்பிரமணி


                                                     


41. தமிழில் நாற்பத்திரண்டு ஒரெழுத்து ஒருமொழிகள் உள்ளன என குறிப்பிட்டவர் யார்?

A புலவர் குழந்தை                             

B.திருக்குறளார் வீ. முனிசாமி            

C.பவணந்தி முனிவர்         

D.திருவள்ளுவர்

42, 'புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்' என்று கூறும் நூல் எது?

A. மணிமேகலை 

B.சிலப்பதிகாரம் 

C. பட்டினப்பாலை            

D.நெடுநல்வாடை

43. வெள்ளை ரோஜா என்னும் கவிதை நூலை இயற்றியவர் யார்?

A.திரு.வி.க                          

B.தேனரசன்                        

C. கல்கி                

D.வரதன்

44. நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றியவர் யார்?

A. பவணந்தி முனிவர்    

B. புலவர் குழந்தை     

C.வீ. முனிசாமி    

 D. கபிலர்

45. "வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும்" என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

A. சேந்தன்திவாகரம்                                        

B. தனிப்பாடல் திரட்டு      

C.சூடாமணி நிகண்டு                        

D.திருவள்ளுவமாலை

46,வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?

A நாலடியார்                       

B.திருக்குறள்                       

C. கலிங்கத்துப்பரணி                        

D. கலித்தொகை

47. நாலடியார் யாரால் எழுதப்பட்டது?

A. நாயன்மார்கள் 

B.ஆழ்வார்கள்     

C. சமண முனிவர்கள்         

D. சைவர்கள்

48. பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. பாரதியார்                       

B.பாரதிதாசன்                     

C.வாணிதாசன்                    

D.வண்ணதாசன்

49.நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?

A. 500                  

B.600                   

C. 400                  

D.100

50 நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - என்னும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?

A.திருக்குறள்                      

B.நாலடியார்                       

C.திருவள்ளுவமாலை        

D. பதிற்றுப்பத்து

51.உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் புகழ் பெற்ற நூலை இயற்றியவர் யார்?

A. திருக்கறளார்     

B.வீ. முனிசாமி      

C.தேனரசன்                                

D.திருவள்ளுவர்

52. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர் யார்?

A. தேனரசன்                                                     

B.சுப்ரபாரதிமணியன்        

C. கோமல் சுவாமிநாதன்                  

D.பிச்சமூர்த்தி

                                                            TERM - 03

53. பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டது?

A.ஐந்நூறு             

B.நானூறு             

C.இருநூறு           

D.நூறு

54.நாட்டுப்பறப்பாடலை எவ்வாறு அழைப்பர்?

A. தாலாட்டுப் பாடல்         

B. வழிபாட்டுப் பாடல்       

C. ஒப்பாரிப் பாடல்                           

D.வாய்மொழி இலக்கியம்

55. "தன்பொருநைப் புனல் நாடு - என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் யார்?

A. திருஞானசம்பந்தர்         

B. மாணிக்கவாசகர்                           

C. சேக்கிழார்                      

D. சுந்தரர்

56. திருப்புகழை பாடியவர் யார்?

A. அருணகிரிநாதர்                  

B.குமரகுருபரர்   

 C.ஆண்டாள்     

D.மாணிக்கவாசகர்

57."இரசிகமணி ' என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

A. முனைப்பாடியார்          

B.சே.பிருந்தா       

 C.டி.கே. சிதம்பரநாதர்   

D. அருணகிரிநாதர்

58. காவடிச்சிந்து பாடியவர் யார்?

A.அண்ணாமலையார்            

B. கபிலர்                   

C. பரணர்                  

D. திரிகூடராசப்பக்கவிராயர்

59. குற்றாலக் குறவஞ்சி - நூலை இயற்றியவர் யார்?

A. அண்ணாமலையார்       

B.கபிலர்

C. பரணர்             

D.திரிகூடராசப்பக் கவிராயர்

60.நாலாயிரத்திவ்விய பிரபந்தம் - நூலை தொகுத்தவர் யார்?

A. பரிமேலழகர்  

B. மணக்குடவர்  

C.தச்சர்  

D.நாதமுனி

61. முனைப்பாடியார் வாழ்ந்த நூற்றாண்டு எது?

A பதின்மூன்றாம் நூற்றாண்டு                          

B. பன்னிரண்டாம் நூற்றாண்டு

C பத்தாம் நூற்றாண்டு                                      

D.ஆறாம் நூற்றாண்டு

62. முளைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?.

A 220                   

B. 225                  

C, 250                  

D. 260

63. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் " என்று கூறியவர் யார்?

A.அப்பரடிகள்                    

B.காந்தியடிகள்.   

C.பாரதிதாசன்                     

D.பாரதியார்

64. செல்லத்துப் பயனே ஈதல் ' என்று கூறும் நூல் எது?

A.அகநானூறு         

B. நாலடியார்          

C.புறநானூறு                      

D.திருக்குறள்

65, திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் யார்?

A. திருவள்ளுவர்                                

B. அருணகிரிநாதர்                                            

C. குன்றக்குடி அடிகளார்                   

D. வள்ளலார்.

66. பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது?

A. சிறுகூடல்பட்டி

B.திருவெஃகா                    

C.திருமறைக்காடு              

D. கடலூர்

67. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

A. முத்தையா                      

B. விருத்தாச்சலம்

C.சுப்புரத்தினம்   

D.வேங்கடரத்தினம்

68. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது?

A.பைபிள்             

B.குரான்

C.பகவத்கீதை                     

D. இயேசு காவியம்

69] , வீடு முழுக்க வானம் - என்னும் கவிதை நூலை இயற்றியவர் யார்?

A.வளர்மதி          

B. காயிதேமில்லத்              

C. சே.பிருந்தா                     

D.முத்துலட்சுமி

70, கண்ணியமிகு ' என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர் யார்?

A. கவிமணி         

B.காயிதேமில்லத்

C.தந்தை பெரியார்

D. மகாத்மா காந்தி

71. பழமொழி நானூறு எவ்வகை நூல்களுள் ஒன்று?

A எட்டுத்தொகை                              

B.பத்துப்பாட்டு

C. பதினெண்கீழ்க்கணக்கு                

D.பதினெண்மேல்கணக்கு

72. பாய்மரக்கப்பல் - என்னும் நூலை இயற்றியவர் யார்?

A. சே. பிருந்தா      

B. வளர்மதி             

C. பாவண்ணன்   

D.காயிதேமில்லத்

73. நுண் துளி தூங்கும் குற்றாலம் - என்று பாடியவர் யார்?

A. திருஞான சம்பந்தர்        

B.திருநாவுக்கரசர் 

C.சுந்தரர்

D.மாணிக்கவாசகர்

74. பாரதியார் பிறந்த ஊர் எது?

A. தூத்துக்குடி                     

B. திருநெல்வேலி

C. எட்டையபுரம் 

D.மணியாச்சி

75. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ' இரண்டாம் திருவந்தாதியை' இயற்றியவர் யார்?

A. பூதத்தாழ்வார்                 

B.பொய்கையாழ்வார்        

C. பெரியாழ்வார்                

D. திருப்பாணாழ்வார்

76.நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?

 A. பூதத்தாழ்வார்                

B.பொய்கையாழ்வார்

c.பெரியாழ்வார்                 

D.திருப்பாணாழ்வார்

77. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?

A. நல்வேட்டனார்                             

B. மூன்றுறை அரையனார்

C.டி. கே. சிதம்பரநாதர்                      

D.அருணகிரிநாதர்

78. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

A. திருமுனைப்பாடி                          

B.திருவாரூர்                       

C.திருவாமூர்                       

D.பழநி

79. திரிகூடமலை என வழங்கப்படுவது?

A. இமயமலை    

B.குற்றாலமலை  

C. ஆளைமலை   

D. பொதிகை மலை

80.சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றி பாடியவர் யார்?

A பிள்ளைப்பெருமாள்                      

B. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

C. கடிகைமுத்துப் புலவர்                  

D.நமசிவாயப் புலவர்

81. முனைப்பாடியார் ஒரு?

A சைவப்புலவர்   

B. சமணப்புலவர் 

C. வைணவப்புலவர்               

D. அனைத்தும் தவறு

82. அருளோசை ' என்னும் இதழை நடத்தியவர் யார்?

A. டி.கே. சிதம்பரநாதர்                      

B. அருணகிரிநாதர்              

C.குன்றக்குடி அடிகளார்.                   

D. இராமலிங்க அடிகளார்

83, கவியரசு ' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

A.மருதகாசி                                                      

B. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

C.எம். எஸ். விஸ்வநாதன்                  

D. கண்ணதாசன்

84, 'பயணம்' என்னும் சிறுகதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

A. பிரயாணம்                                    

B. மீசைக்கார பூளை                          

C. நேற்று வாழ்ந்தவர்கள்   

D. கடலோர வீடு

85.கவிமணி தேசிக விநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் எது?

A. குற்றாலம்                      

B.கன்னியாகுமரி 

C.திருநெல்வேலி 

D. திருச்செந்தூர்

86.அகத்தியர் வாழ்ந்த இடம் எது?

A கொல்லிமலை 

B.பொதிகை மலை                       

C. ஆனை மலை  

D. பச்சை மலை

87. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும், மந்திசிந்தி கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் - என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

A. திருமுருகாற்றுப்படை                                 

B.குற்றாலக் குறவஞ்சி

C.பொருநராற்றுப்படை                                   

D. பெரும்பாணாற்றுப்படை

88. மூன்றுறை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

A.கி. பி. நான்காம் நூற்றாண்டு.                         

B.கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

C.கி. பி. மூன்றாம் நூற்றாண்டு                         

D. கி. பி. ஆறாம் நூற்றாண்டு


       click here for answer key

 

 

 


Comments