TNTET - 2022 தாள் - 2 6th Std தமிழ் நூல் மற்றும் நூலாசிரியர்கள் 50 question & answer

 

                        


SUBHI LEGENDRY EDUCATION – TAMIL IMPORTANT QUESTION BANK

 ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்தலுக்கும் நமது இணையதளத்தின் சார்பாக பாடத்திட்டம் வாரியாக தேர்வுகள் வழங்கப்படுகின்றது 

                                     தகுதி தேர்வை பொருத்தவரையில் தமிழ் பாடத்திற்கு இரண்டு விதமான பாடத்திட்டங்களானது வகுக்கப்பட்டுள்ளது முதலில் இலக்கணப் பகுதியை முழுமையாக உள்ளடக்கியும் இரண்டாவது மொழித்திறன் பகுதியை உள்ளடக்கியதாகவும் அமையப் பெற்றுள்ளது இவற்றில் மொழித்திறன் பகுதியை தொகுக்கின்ற பட்சத்தில் 27 தலைப்புகளானது இடம்பெற்றுள்ளது இதனைக் குறித்த முழுமையான விளக்கங்கள் ஆனது நமது இணையதளத்தில் முந்தைய பதிவுகளில் வழங்கப்பட்டுள்ளது 

                                                          ஆகவே இணையதளத்தின் வாயிலாக இவற்றில் ஒவ்வொரு தலைப்புகள் வாரியாக தேர்வுகளானது இன்று முதல் ஆரம்பமாகிறது இவற்றில் முதலில் உள்ள தலைப்பு நூல் மற்றும் நூல் ஆசிரியர்கள் இதனை பயிற்சி பெறும் பொழுது 

பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நூல் 

அந்த நூலை எழுதிய ஆசிரியர்கள்

 அந்த நூலில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்

 அந்த நூலுக்கு வழங்கக்கூடிய வேறு சிறப்பு பெயர்கள் 

ஆசிரியர்களுடைய சிறப்பு பெயர்கள் 

ஆசிரியர்கள் எழுதிய நூலின் வரலாறு 

                                      இதனை முழுமையாக தொகுத்து பார்க்க வேண்டும் அதன் அடிப்படையில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள தகவல்களை இணைத்து இணையதளத்தின் வாயிலாக மாதிரி தேர்வு -1

                                     இவற்றில் ஆறாம் வகுப்பில் இடம் பெற்றுள்ள தகவல் ஒருங்கிணைத்து 54 வினா மற்றும் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் பயன்படுத்திக் கொள்ளவும்

1.தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! - என பாடியவர் யார்

A பாரதிதாசன்               B..பாரதியார்                   C. சாலை இளந்திரையன்                    D. சுரதா

2. தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் என தொடங்கும் பாடலை எழுதியவர் யார்

A.பாரதியார்                    B. பாரதிதாசன்           C. கவிஞர் காசி ஆனந்தன்               D. கண்ணதாசன்"

3. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது

A. கனிச்சாறு            B.இன்பத் தமிழ்           C.பாவிய கொத்து             D. குழந்தை காப்பியம்

4.கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி என தொடங்கும் பாடலை எழுதியவர் யார்

A.பாரதியார்        B.இளங்கோவடிகள்        C.பெருஞ்சித்திரனார்         D. மறைமலை அடிகள்

5 கனிச்சாறு கொய்யாக்கனி பாவிய கொத்து நூறாசிரியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்

A.பாரதியார்     B.சாலை இளந்திரையன்      C. மறைமலையடிகள்               D.பெருஞ்சித்திரனார்

6. தென்மொழி தமிழ்ச்சிட்டு தமிழ்நிலம் போன்ற இதழ்களை நடத்தியவர் யார்

A.பெருஞ்சித்திரனார்               B.பாரதியார்                    C.பெரியார்                      D.அயோத்திதாசர்

7.பாவலரேறு என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் யார்

A.பெருஞ்சித்திரனார்               B.பாரதியார்                    C. பெரியார்                     D. அயோத்திதாசர்

8. தமிழில் மிகப் பழமையான நூல் எது

A. சிலப்பதிகாரம்         B. மணிமேகலை         C, திருக்குறள்               D. தொல்காப்பியம்

9. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி என்பது யாருடைய பாடல்

A. தொல்காப்பியர்          B..இளங்கோவடிகள்             C. அவ்வையார்         D. மறைமலை அடிகள்

10, நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது

A. தொல்காப்பியம்                   B. கார்நாற்பது               C.பதிற்றுப்பத்து               D.நற்றிணை

11. கடல் நீர் முகந்த கமஞ் சூழ் எழிலி என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ளது

A. தொல்காப்பியம்       B., கார்நாற்பது           C. பதிற்றுப்பத்து          D. நற்றிணை

12. இயற்கை வாழ்த்துவதாக அமைந்த நூல் எது

A. மணிமேகலை        B.. குண்டலகேசி         C.சிலப்பதிகாரம்               D.சீவகசிந்தாமணி

13.. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்

A சேரன் செங்குட்டுவன்       B.. இளங்கோவடிகள்     C.உமறுப்புலவர்  D.அப்பூதியடிகள்

14. முத்தமிழ் காப்பியம் குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படும் நூல் எது

A. திருக்குறள்               B..சீவகசிந்தாமணி    C. சிலப்பதிகாரம்         D. மணிமேகலை

15. இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது எது

A. வளையாபதி, குண்டலகேசி'                        B. மணிமேகலை, திருக்குறள்

C.சிலப்பதிகாரம், மணிமேகலை                     D. சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம்

16. திங்கள் ஞாயிறு மழை என இயற்கை வாழ்த்துவதாக தொடங்கும் நூல் எது

A.திருக்குறள்    B..சிலப்பதிகாரம்                C.குழந்தை காப்பியம்    D. சீவக சிந்தாமணி

17.. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் எனக் கூறப்படுவர் யார்

A. பாரதிதாசன்              B.பாரதியார்                    C.பெருஞ்சித்திரனார்.              D. சுரதா

18. பாஞ்சாலி சபதம் கண்ணன் பாட்டு குயில் பாட்டு போன்ற நூல்களை இயற்றியவர் யார்

Aபாரதியார்                     B. பாரதிதாசன்              C. கண்ணதாசன்          D. வாணிதாசன்

19. நாராய் நாராய் செங்கால் நாராய் எனும் பாடலை எழுதியவர் யார்

A.பாரதியார்     B.இளங்கோவடிகள்  C.சத்திமுத்தப் புலவர்            D.சீதகாதி

20. பொய்யில் புலவர் என அழைக்கப்படுபவர் யார்.

A இளங்கோவடிகள்  B.தொல்காப்பியர்       C.பாரதியார்     D.திருவள்ளுவர்

21. திருக்குறள் கீழ்க்கண்ட எந்த நூல்களில் ஒன்று

A. பதினெண்கீழ்க்கணக்கு                 B..பதினெண்மேற்கணக்கு   

C. ஐம்பெரும் காப்பியம்                       D.எதுவுமில்லை

22. வாயுரை வாழ்த்து என சிறப்பு பெயர் கொண்ட நூல் எது

A. வளையாபதி            B.. மணிமேகலை        C.சிலப்பதிகாரம்          D.திருக்குறள்

                                                             term  - 02

23. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் - எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் யார்

A. பாரதியார்                   B.இளங்கோவடிகள்                 C.ஒளவையார்              D. கபிலர்

24. கொன்றைவேந்தன் நல்வழி போன்ற நூல்களை இயற்றி உள்ளவர் யார்

A. பாரதியார்                   B.இளங்கோவடிகள்                 C.ஒளவையார்              D. கபிலர்

25. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்

A.சுரதா            B.பெருஞ்சித்திரனார்   

C.பாரதியார்        D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

26. நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு - என தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்

A.கூடலூர் கிழார்                                     B.அவ்வையார்            

C. பெருவாயின் முள்ளியார்              D. நம் பூதனார்

27. ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்

A. இளங்கோவடிகள்                B. பெருவாயின் முள்ளியார்

C.அப்பூதியடிகள்                        D.அவ்வையார்

28. ஆசாரக்கோவை என்பது

A. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்               B.பதினெண் மேல் கணக்கு நூல்கள்

C. ஐம்பெரும் காப்பியங்கள்                              D. நல்வழி காப்பியங்கள்

29.நானிலம் படைத்தவன் என்ற பாடலின் ஆசிரியர் யார்

A.சுரதா                             B.முடியரசன்                C. பெருங்கோ               D. சாலை இளந்திரையன்

30. கீழ்க்கண்டவற்றுள் முடியரசன் எழுதிய நூல்கள் எது

A. பூங்கொடி                   B.வீரகாவியம்              C. காவியப்பாவை                     D. அனைத்தும்

31. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பட்டவர் யார்

Aவாணிதாசன்             B.அண்ணாதுரை         C. முடியரசன்               D.பாரதியார்

32. நானிலம் படைத்தவன் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது

A. பூங்கொடி      B.வீரகாவியம்    C.காவியப்பாவை   D. புதியதொரு விதி செய்வோம்

33. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்

A. பாரதிதாசன்              B.பாரதியார்     C. சாலை இளந்திரையன்     D. கவிஞர் கண்ணதாசன்

34. நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்று இவர்களை பாராட்டும் நூல் எது

A. பட்டினப்பாலை      B.குறுந்தொகை           C.ஐங்குறுநூறு             D. அகநானூறு

35. கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது எனக் கூறும் நூல் எது

A.திருக்குறள்                B. அகநானூறு              C.புறநானூறு       D. பட்டினப்பாலை

36.ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் என தொடங்கும் நூல் எது

A.ஐங்குறுநூறு             B.பழமொழி நானூறு              C.திருக்குறள்                D.சிலப்பதிகாரம்

                                 term  - 03

37.தமிழ்தேசியம் என்ற பாடலை இயற்றியவர் யார்?

A.பாரதியார்                  B.கவிமணி                     C.பாரதிதாசன்                              D.தாராபாரதி

38.தாராபாரதி நூல்கள் தவறானது எது?

A.புதிய விடியல்                        B.இது எங்கள்கிழக்கு            

C.ஆரியஜோதி                             D.விரல்நுனி வெளிச்சங்கள்

39. பாரதம் அன்றைய நாற்றங்கால் எனும் கவிதை எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?

Aதாராபாரதியின் கவிதைகள்                         B.பாரதிதாசனின் கவிதைகள்

C.பாரதியின் கவிதைகள்                                    D.கலிமணி கவிதைகள்

40.தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் எது ?

Aதிருக்குறள்                 B.நாலடியார்                  C.நாட்டுப்புறப்பாடல்                D.திருமறை

41.பராபரக்கண்ணியை இயற்றியவர் யார்?

A.நாமக்கல் கவிஞர்                B.வள்ளுவர்                   C.தாயுமானவர்                            D.கவிமணி

42.தமிழ்மொழியின் உபநிடதம் எது?

A.நாமக்கல் கவிஞர் பாடல்கள்                      B.பாரதியார் பாடல்கள்

C.பாரதிதாசன் பாடல்கள்                                   D.தாயுமானவர் பாடல்கள்

43.எல்லோரும் இன்புற்று இருக்க என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

A.தாயுமானவர்            B.வள்ளுவர்                   C.பாரதி              D.கலீல் ஜிப்ரான்

44.நீங்கள் நல்லவர் என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?

A.பாரதியார்                    B.கவிமணி                     C.கலீல் ஜிப்ரான்                       D.தாயுமானவர்

45.நீங்கள் நல்லவர் என்ற கவிதை தொகுப்பை மொழிபெயர்த்தவர்?

A.தாயுமானவர்            B.கலில்ஜிப்ரான்          C.புவியரசு       D.கலிமணி

46.தீர்க்கதரிசி என்ற நூலின் ஆசிரியர்?

A.தாயுமானவர்            B.கலீல் ஜிப்ரான்        C.புவியரசு       D.கவிமணி

47.எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள்?

A.உபபாண்டவம்                                                      B.கதாவிலாசம் தேசாந்திரி

C. கால் முளைத்த கதைகள்                            D.இவை அனைத்தும்

48.எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய பாதம் என்னும் கதை எந்த தொகுப்பில் உள்ளது?

A.கால் முளைத்த கதைகள்                             B.உபபாண்டவம்

C.தாவரங்களின் உரையாடல்                         D.தேசாந்திரி

49.அன்பில் இன்பம் காண்போம் என்ற வரியை பாடியவர்?

A.நாமக்கல் கவிஞர்                               B.எஸ். ராமகிருஷ்ணன்

C.முத்தரயனார்.                                         D.பாரதியார்

50.ஆசிய ஜோதி யாரால் எழுதப்பட்ட நூல்?

A.வள்ளலார்                  B.கவிமணி                     C.புத்தர்                             D.தாயுமானவர்

51.ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு எழுதிய லைட் ஆஃப் ஆசியா என்ற நூலைத் தழுவி எழுதிய நூல்?

A.பராபரக்கண்ணி                     B.பாதம்                             C.மனிதநேயம்               D.ஆசியஜோதி

52.ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்?

A.கவிமணி                    B.வள்ளலார்                  C.புத்தர்                             D.நாமக்கல் கவிஞர்

53.மளிதநேயம் பற்றி கூறும் நூல்?

A.பதிற்றுப்பத்து                          B.நற்றிணை                   C.புறநானூறு                 D.குறுந்தொகை

54.'தமக்கென முயலா தோன்றால் பிறர்க்கென, முயலுநர் உண்மை யானே"என்ற வரிகள் கூறும் நூல்?

A.புறநானூறு                 B.அகநானூறு               C.திருக்குறள்                D.ஐங்குறுநூறு

 

                         click here for answer key 

Comments